வெள்ளி, 14 ஜனவரி, 2011

நனி நன்றி !

வணக்கம்.

செம்மொழி இளம் அறிஞ்சரும், தமிழாய் வாழ்ந்து வருபவரும்,உலகத் தமிழர்களை தம் தமிழால் உறவாக பெற்றவருமான,

எம் அய்யா, புதுவை ,முனைவர் மு. இளங்கோவன் அவர்களுக்கு, எம் உளம் கனிந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

அய்யா அவர்கள் எமது ஆக்கதில் பெரிதும் ஈடுபாடு கொண்டவர்.என் வாழ்வில் பல்வேறு இன்னல்களில் நான் சிக்குண்டபோது
தனது தமிழ் அறிவால் என்னை உற்சாகமூட்டி வழி நடத்தியவர்.

தமிழகத்தில் எங்கேயோ ஒரு சிற்றூரில் பிறந்து வசித்து வந்த எனக்கு  தமிழின் சுவையை ஊட்டியவர்.

பள்ளியிறுதி வகுப்போடு இடை நின்ற என் கல்வியை நினைத்து வருந்திய நிலையில் இருந்தபோது,

அனைவரையும் ஈர்க்கும் தம் தமிழ் பயிற்றுவிக்கும் புலமையினால் என்னை சொக்கவைத்து,

 தமிழ் இலக்கிய முதுகலை,தமிழ்ப்பண்டிதர் பயிற்சி, மற்றும் ஆய்வியல் நிறைஞ்சர் பட்டம் வரை என்னை உயர்த்தியவர்.


என் கண்ணுக்கெட்டா தொலைவிலிருந்த இணையத்தில் சுயமாக வலைப்பூ உருவாக்குவது வரை, என்னை செம்மையாக்கிய
எம் அய்யா, அவர்களுக்கு,

இவ்வினிய திருநாளில் என் உளம் கனிந்த நன்றியை உரித்தாக்கி வணங்குகிறேன்.

                                                                                                   அன்புத் தம்பி,

                                                                                               அர. விவேகானந்தன்
                                                                                               போளூர் (ஒடநகரம்)
                                                                                               பேசி :9944386162.