வெள்ளி, 6 மே, 2011

செம்மொழி விருது! எம் அய்யா, முனைவர்.மு.இளங்கோவன்!



இந்தியக் குடியரசுத்தலைவர் மாண்புயர் பிரதிபா தேவிசிங் பாட்டீல் அவர்களிடம் முனைவர் மு.இளங்கோவன் செம்மொழி இளம் அறிஞர் விருது பெறுதல்(நாள்: 06.05.2011)



புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் புதுதில்லியில் இன்று(06.05.2011) காலை 11 .30 மணிக்கு நடைபெற்ற விழாவில் குடியரசுத்தலைவர் திருமதி பிரதிபா தேவிசிங் பாட்டீல் அவர்களிடம் செம்மொழி இளம் அறிஞர் விருது பெறறார். முனைவர் மு.இளங்கோவன் தமிழின் பழந்தமிழ் இலக்கிய,இலக்கணங்களில் ஆய்வுசெய்துள்ளமையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பள்ளது.



மு.இளங்கோவன் மலைபடுகடாம் என்ற நூலில் புகழப்படும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நன்னன் என்ற அரசனின் கோட்டையைக் கண்டுபிடித்துத் தமிழுலகிற்கு அறிமுகம் செய்தவர். தமிழ் ஆய்வுகளை இணையதளத்திற்கு எடுத்துச்சென்றவர். வாய்மொழிப்பாடல்கள், இலக்கியம் அன்றும் இன்றும் உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர். இவற்றைக் கவனத்தில் கொண்டு இந்த விருது வழங்கப்படுகின்றது. விருதுத்தொகை ஒரு இலட்சமும், பாராட்டுப்பத்திரமும் வழங்கப்பட்டுள்ளது. விருதுபெற்றதும் இன்று மாலையில் தில்லித் தமிழ்ச்சங்கத்தில் முனைவர் மு.இளங்கோவன் உள்ளிட்ட விருதுபெற்ற அறிஞர்களுக்கு நடைபெறும் பாராட்டுவிழாவிலும் இவர் கலந்துகொள்கின்றார். 






                             


     

இந்
திக் குடியரசுத்தலைவர் மாண்புயர் பிரதிபா தேவிசிங் பாட்டீல் அவர்களிடம் முனைவர் மு.இளங்கோவன் செம்மொழி இளம் அறிஞர் விருது பெறுதல்(நாள்: 06.05.2011)


   








எடுத்தாளுதல்,

நன்றி,
எம் அய்யா,முஇ.